top of page

டெங்கு நோயாளர்களுக்கான அறிவுறுத்தல்கள்

  • Writer: TH-Batticaloa
    TH-Batticaloa
  • Oct 22, 2019
  • 1 min read

Updated: Jan 1, 2021

1. நோயாளிக்கு ஓய்வு வழங்கவும்


கஷ்டப்படவோ பாரமான வேலைகள் செய்யவோ இடமளிக்க வேண்டாம்.

2. திரவ வகைகளை பருக கொடுக்கவும்.

  • பால், பழச்சாறு, தோடம்பழச்சாறு, ஜீவனீ, தெம்பிலி, சூப் போன்றன பொருத்தமானதாகும்.

  • நீரை மட்டும் அருந்தச் செய்ய வேண்டாம்.

  • சிவப்பு அல்லது கபில நிற பாண வகைகளைக் குடிக்கச் செய்ய வேண்டாம். ( சிவப்பு நிற குளிர்பா னம், கோப்பி).

  • வழக்கமான திண்ம உணவுகளை உட்கொள்ள முடியுமாயின் அவற்றை வழங்கவும்.


3. நோயாளி சிறுநீர் கழிக்கும் தடவைகளின் எண்ணிக்கை பற்றி கவனத்திற் கொள்ளவும்.


நோயாளி சிறுநீர் கழிக்கும் தடவைகளின் எண்ணிக்கை குறைவாயிருப்பின் உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லவும்.


4. காய்ச்சல் காணப்படின்,


  • சாதாரண நீரினால் மேணியை நனைக்கவும்.

  • பெரசிட்டமோல் (Paracetamol) உரிய அளவு 6 மணித்தியாலத்திற்கொரு முறை வழங்கவும்.(பிள்ளைகளுக்காக உரிய அளவினை எடைக்கு ஏற்ப வழங்கவும்/ வயது வந்தோருக்கு 1 கிராம்).

  • காய்ச்சலுக்காக வழங்கப்படும் ஏனைய மருந்து வகைகளை (விசேடமாக கடுமையான காய்ச்சலுக்கு வழங்கப்படும் மருந்துகள்) வழங்க வேண்டாம். உதா-: Diclofinac/ Ibuprofen/Mefenamic Acid – Tablets / Syrups


5. காய்ச்சல் 2 நாட்களுக்க மேலாக காணப்படின்


மூன்றாவது தினத்தில் குருதிப் பரிசோதனையொன்றை மேற்கொள்ளவும்.


6. பின்வரும் அறிகுறிகள் காணப்படின் நோயாளியை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கவும்.


  • திரவ வகைகளைப் பருக முடியாதிருத்தல் (அடிக்கடி வாந்தயெடுத்தல்).

  • உணவு, பாண வகைகளை நிராகரித்தல்.

  • கடுமையான தாகம்.

  • நோயாளி சிறுநீர் கழிக்கும் தடவைகள் குறைவடைதல் ( 6 மணித்தியாலத்திற்கு கூடுதலான நேரத்திற்குள் சிறுநீர் வெளிவராமை).

  • கடுமையான வயிற்று வலி.

  • தூக்க நிலைமை.

  • நடத்தையில் மாற்றம் ஏற்படல்.

  • சிவப்பு/ கறுப்பு/ கபில நிற வாந்தியெடுத்தல்.

  • கறுப்பு நிற மலம் வெளியாதல்.

  • குருதிப்பெருக்கு (முரசுகளிலிருந்து குருதிப்பெருக்கு, சிறுநீர் சிவப்பு நிறத்தில் வெளியாதல்).

  • தலை சுற்றுதல்.

  • கைகால்கள் குளிரடைதல்


தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு

சுகாதார,போஷணை மற்றும் சுதேஷ வைத்திய அமைச்சு

 
 
 

Comments


bottom of page