டெங்கு நோயாளர்களுக்கான அறிவுறுத்தல்கள்
- TH-Batticaloa
- Oct 22, 2019
- 1 min read
Updated: Jan 1, 2021

1. நோயாளிக்கு ஓய்வு வழங்கவும்
கஷ்டப்படவோ பாரமான வேலைகள் செய்யவோ இடமளிக்க வேண்டாம்.
2. திரவ வகைகளை பருக கொடுக்கவும்.
பால், பழச்சாறு, தோடம்பழச்சாறு, ஜீவனீ, தெம்பிலி, சூப் போன்றன பொருத்தமானதாகும்.
நீரை மட்டும் அருந்தச் செய்ய வேண்டாம்.
சிவப்பு அல்லது கபில நிற பாண வகைகளைக் குடிக்கச் செய்ய வேண்டாம். ( சிவப்பு நிற குளிர்பா னம், கோப்பி).
வழக்கமான திண்ம உணவுகளை உட்கொள்ள முடியுமாயின் அவற்றை வழங்கவும்.
3. நோயாளி சிறுநீர் கழிக்கும் தடவைகளின் எண்ணிக்கை பற்றி கவனத்திற் கொள்ளவும்.
நோயாளி சிறுநீர் கழிக்கும் தடவைகளின் எண்ணிக்கை குறைவாயிருப்பின் உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லவும்.
4. காய்ச்சல் காணப்படின்,
சாதாரண நீரினால் மேணியை நனைக்கவும்.
பெரசிட்டமோல் (Paracetamol) உரிய அளவு 6 மணித்தியாலத்திற்கொரு முறை வழங்கவும்.(பிள்ளைகளுக்காக உரிய அளவினை எடைக்கு ஏற்ப வழங்கவும்/ வயது வந்தோருக்கு 1 கிராம்).
காய்ச்சலுக்காக வழங்கப்படும் ஏனைய மருந்து வகைகளை (விசேடமாக கடுமையான காய்ச்சலுக்கு வழங்கப்படும் மருந்துகள்) வழங்க வேண்டாம். உதா-: Diclofinac/ Ibuprofen/Mefenamic Acid – Tablets / Syrups
5. காய்ச்சல் 2 நாட்களுக்க மேலாக காணப்படின்
மூன்றாவது தினத்தில் குருதிப் பரிசோதனையொன்றை மேற்கொள்ளவும்.
6. பின்வரும் அறிகுறிகள் காணப்படின் நோயாளியை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கவும்.
திரவ வகைகளைப் பருக முடியாதிருத்தல் (அடிக்கடி வாந்தயெடுத்தல்).
உணவு, பாண வகைகளை நிராகரித்தல்.
கடுமையான தாகம்.
நோயாளி சிறுநீர் கழிக்கும் தடவைகள் குறைவடைதல் ( 6 மணித்தியாலத்திற்கு கூடுதலான நேரத்திற்குள் சிறுநீர் வெளிவராமை).
கடுமையான வயிற்று வலி.
தூக்க நிலைமை.
நடத்தையில் மாற்றம் ஏற்படல்.
சிவப்பு/ கறுப்பு/ கபில நிற வாந்தியெடுத்தல்.
கறுப்பு நிற மலம் வெளியாதல்.
குருதிப்பெருக்கு (முரசுகளிலிருந்து குருதிப்பெருக்கு, சிறுநீர் சிவப்பு நிறத்தில் வெளியாதல்).
தலை சுற்றுதல்.
கைகால்கள் குளிரடைதல்
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு
சுகாதார,போஷணை மற்றும் சுதேஷ வைத்திய அமைச்சு
Comments